Site icon Tamil News

மரணச் சடங்கில் கலந்துகொள்ளாத மகிந்த!!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகவீனமுற்றுள்ளார் என்ற தகவல் தற்போது பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாத காரணத்தினால் இந்தச் செய்தி பரவி வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என முகநூலில் பகிரப்பட்டுள்ளது.

ஆனால் பரவி வரும் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) பாமன்கட ஸ்ரீ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பாமன்கடை ஸ்ரீ மகா விகாரை விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய வல்பொல பியானந்த தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கடற்படையின் சிவில் மற்றும் பொறியியல் பிரிவினரால் இந்த அன்னதான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version