Site icon Tamil News

நாடளாவிய ரீதியில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

கடந்த வாரம் மத்தேகொடையில் தமது முதலாவது எரிபொருள் நிலையத்தை நிறுவிய சினோபெக் எரிபொருள் நிறுவனம், செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம், டீலர்ஷிப்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், வர்த்தக முத்திரை மற்றும் நாடளாவிய செயல்பாடுகளை தொடங்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி ஹம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் உறுதியளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த வாரத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version