Site icon Tamil News

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் செப்டம்பர் 10, 2023 க்கு முன் வெளியிடப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

2022 (2023) G.C.E உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்தார்.

கல்வி அமைச்சு ஏற்கனவே 2023 G.C.E உயர்தர தேர்வு திகதிகளை அறிவித்திருந்தது.

அதன்படி, தேசிய தேர்வு நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version