நாடாளுமன்றம் இன்று (06.10) காலை ஆரம்பமாகிய நிலையில், சபையில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2022 இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின் காரணமாக இந்த சூடான நிலைமை ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதுதொடர்பான விடயத்தை குறிப்பிட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சியினர் அதற்கு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கோரியதையடுத்து இந்த சூடான நிலைமை ஏற்பட்டது.