Site icon Tamil News

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை – சிக்கிய நான்காவது நபர்

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாத தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேர் 4ஆவது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Amandeep Singh என்ற 22 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர்மீது கொலை செய்ததாகவும் கொலை செய்யச் சதி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

சுடும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பில் ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் தொடர்பில் ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைதாகியுள்ளனர்.

அந்த மூவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதைக் கண்டறிய புலனாய்வு நடத்துவதாகக் கனடியக் காவல்துறை அண்மையில் கூறியிருந்தது.

Exit mobile version