Site icon Tamil News

பெரஹர யானை மீது துப்பாக்கிச் சூடு: வனவிலங்கு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹர நிகழ்வில் கலந்து கொண்ட பெண் யானையொன்று வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளது.

குறித்த அதிகாரி மாபாகட வெவ வனஜீவராசிகள் காரியாலயத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஆவார்.

சம்பவத்ததையடுத்து மஹியங்கனை பொலிஸார் வனவிலங்கு அதிகாரியை கைது செய்துள்ளனர்.

மகாவலி ஆற்றங்கரையில் சங்கிலியுடன் காணப்பட்ட பெண் யானையை காட்டு யானை எனத் தவறாகக் கருதி வனஜீவராசி அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த யானைக்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

Exit mobile version