Site icon Tamil News

தங்கம் கடத்தி வந்த இலங்கைப் பெண் நேபாள விமான நிலையத்தில் கைது

நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) அதிகாரிகள் சட்டவிரோதமாக தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

இலங்கைப் பிரஜையான காந்தமாத்ரே கவாஸ்கர், தனது உள்ளாடையில் மறைத்து பொடி வடிவில் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து வந்த பெண் கைது செய்யப்பட்டதாக டிஐஏ பாதுகாப்புத் தலைவர் டிஐஜி அர்ஜுன் சந்த் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 1 கிலோ 300 கிராம் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version