Site icon Tamil News

கனடாவின் இரு வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இருவர் பலி

கனடாவின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பிரம்டன் மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரம்டனின் ருதர்போர்ட் மற்றும் பிரம்ஸ்டீலி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 36 வயதான அமோர் அப்தல்லா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நோர்த் யோர்க் பகுதியில் மதுபானசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

47 வயதான ரொபர்ட் கானின்ஸோ என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நோர்த் யோர்க்கின் Avellino Social Club என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version