Site icon Tamil News

பென்சிலோனியாவில் துப்பாக்கிச் சூடு : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழும் பென்சிலோனியாவில், மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் பெயர் ஜோசுபா லூசோ (வயது19) ஜீசஸ் பெரோஸ் (8) ஜெபாஸ்டியான் (9) என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

Exit mobile version