Tamil News

ட்விட்டரின் புதிய புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரத் தலைவர் லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என மஸ்க் தனது பதிவில் கூறினார்.

“அதே நேரத்தில் நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version