Tamil News

கனேடிய இளம்பெண்ணின் கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி

கனேடிய இளம்பெண் ஒருவரின் கமெராவில், அரை நிர்வாணப் பெண்கள் இருவர் இறந்த மானின் உடல் ஒன்றைத் தின்னும் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அவர்கள் சூனியக்காரிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Powell River என்னுமிடத்தில் வாழும் Corinea Stanhope (36) என்னும் இளம்பெண், தன் தோட்டத்தில் மான் ஒன்று இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.

விலங்குகள் ஆர்வலர்களான கொரைனியாவும் அவரது தாத்தாவும், அந்த மானை உண்ண ஏதாவது விலங்குகள் வரலாம் என்பதால், அவற்றைப் படம் பிடிக்க கமெரா ஒன்ரை பொருத்திவிட்டுச் சென்றுள்ளார்கள்.மறுநாள் அந்த கமெராவை சோதித்த கொரைனியாவின் தாத்தா, உடனடியாக வருமாறு தன் பேத்தியை அழைத்துள்ளார்.

பிணம் தின்னும் சூனியக்காரிகள்: கனேடிய இளம்பெண்ணின் கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி | Woman Horror Wild Life

கொரைனியா என்ன விடயம் என்று கேட்க, கமெராவில் அரை நிர்வாணப் பெண்கள் காட்சியளிப்பதாகக் கூற, தாத்தா கேலி செய்வதாக எண்ணி அங்கு சென்றுள்ளார் அவர்.தாத்தாவும் பேத்தியும் கமெராவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை மீண்டும் பரிசோதிக்க, அதில், இரண்டு பெண்கள், இடுப்பில் மட்டுமே சிறிய ஆடை உடுத்திக்கொண்டு, இறந்து கிடந்த அந்த மானை உண்ணுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்துள்ளன.

அவர்கள், இறந்து கிடந்த மானின் கால் ஒன்றை எடுத்து உண்பதுபோல தோன்றுவதால், அவர்கள் ஏதோ மாயமந்திரம் செய்யவந்த சூனியக்காரிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.அதே நேரத்தில், அவர்கள் இயற்கைக்கு மரியாதை செலுத்துபவர்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.

Exit mobile version