Tamil News

‘போர் தொழில்’ திரைப்பட முதல் நாள் வசூல் குறித்து அதிர்ச்சி தகவல்!

 

இயக்குனர் விக்னேஷ் ராஜா தமிழில் தன்னுடைய முதல் படமான  “போர் தோழில்” படத்தினை தரமான திரில்லர் கதையாக உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வரும் திரைப்படம் ‘போர் தொழில்’.

இப்படம் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

See the source image

 இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைத்து தயாரிக்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி, பூனம் மெஹ்ரா மற்றும் சந்தீப் மெஹ்ரா ஆவர்.

உலகம் முழுவதும் நேற்று வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம்,
தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது.

அதன் படி, இப்படம் தமிழகத்தில் மட்டும், சுமார் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 2 முதல் 3 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருவதால், திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், இன்றும் – நாளையும் விடுமுறை நாள் என்பதால், முதல் நாளை விட வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version