Tamil News

கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!! குழந்தைகள் கண் முன் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்!

குழந்தைகள் முன்னிலையில் மனைவியை தீ வைத்து கணவன் எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், கதம்பூர் தாலுகாவில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பிரஜாபதி. இவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்னனர். இன்று அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராஜூவின் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து தீயால் காயமடைந்த ராஜூ பிரஜாபதியின் மனைவியை மீட்டு சம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், 85 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவரை கான்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் எஃப்எஸ்எல் குழுவால் அவர் பரிசோதிக்கப்பட்டார்.அப்போது அவர் நிலை மோசமாக இருப்பதால், லக்னோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்களால் அனுப்பப்பட்டார். இந்த தீ விபத்து பொலிஸார் விசாரித்த போது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

Shocking! Man sets his wife on fire in front of children in Kanpur | Crime  News - News9live

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியைக் கொல்லும் நோக்கத்தில் அவரை வீட்டுக்குள் வைத்து ராஜூ பிரஜாபதி டீசலை ஊற்றி தீயை வைத்துள்ளார். இதனால் தீயால் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். அவரைக் காப்பாற்றுமாறு ராஜூ பிரஜாபதியிடம் அவரது குழந்தைகள் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர் செவி சாய்க்கவில்லை. அப்போது உடலில் தீப்பற்றிய நிலையில் இருந்த ராஜூ பிரஜாபதி மனைவி தனது கணவரை ஓடி வந்து கட்டிப் பிடித்தார். இதனால் ராஜூ பிரஜாபதியும் தீயில் காயமடைந்தது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ராஜூ பிரஜாபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கதம்பூர் ஏசிபி ரஞ்சித்குமார் தெரிவித்தார். அத்துடன் ராஜூ பிரஜாபதி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறினார்.குடும்பத் தகராறில் மனைவியை கணவனே எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version