Site icon Tamil News

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தீ விபத்து – இருவர் பலி – பலர் காயம்

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிபத்து சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் கடற்கரை நகரமான Lens (Pas-de-Calais) இல் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பரவிய தீயினை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

வீட்டுக்குள் ஒன்பது பேர் சிக்கியிருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

அதன்முடிவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். காயங்கள் ஏதுமின்றி இருவர் மீட்கப்பட்டனர்.

Exit mobile version