Site icon Tamil News

ஜெர்மனியில் இளம் பெற்றோரின் அதிர்ச்சி செயல் – குழந்தைக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் பச்சிளங்குழந்தையை பெற்றோரே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பீலஃவோட் என்று சொல்லப்படுகின்ற நகரத்தில் 19 வயதுடைய பெண்ணும் 22 வயதுடைய ஒரு ஆணும் தங்களுக்கு பிறந்த குழந்தையை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த கொலை குற்றத்துக்காக இவ்இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் இந்த குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொலை தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் ஆனது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது.

தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த 2 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்இருவரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version