Site icon Tamil News

சிங்கப்பூரில் கணவனுக்கு மனைவி செய்த அதிர்ச்சி செயல்

சிங்கப்பூரில் 50 வயதுப் பெண்ணைக் பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கண்மூடித்தனமான செயலால் கணவனுக்கு மரணத்தை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மணி சுமார் 11.50க்குக் பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்துள்ளது.

அங் மோ கியோ அவென்யு 4இல் உள்ள புளோக்கின் கீழ் 62 வயது நபர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சுயநினைவின்றி அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் உயிரிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த நபலின் மனைவி கைது செய்யப்பட்டார். மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Exit mobile version