Site icon Tamil News

சிங்கப்பூரில் குழப்பத்தை ஏற்படுத்திய WHATSSAPP ME NOW குறிப்பு – சிக்கிய இருவர்

சிங்கப்பூரில் கடனாளிகளை தொந்தரவு செய்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வயது 17 மற்றும் 18 வயது என பொலிஸார் கூறியுள்ளனர்.

பெடோக் சென்ட்ரலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை கூறியது.

அங்குள்ள வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாதனி வைக்கும் தட்டு கவிழ்த்தப்பட்டு, அதில் எச்சரிக்கை குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அந்தக் குறிப்பில் ‘”WHATSSAPP ME NOW” என்று எழுதப்பட்டு இருந்தது, அதனுடன் இரண்டு சிங்கப்பூர் தொடர்பு எண்களும் அடங்கியிருந்தன.

பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக அந்த குறிப்பு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், பெடோக் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமரா உதவியுடன் அவர்களை அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கடந்த நவம்பர் 16, 2023 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version