Tamil News

“நா மறுபடியும் அப்பாவாகிட்டேன்…” சிவகார்த்திகேயன் வெளியிட்ட் மகிழச்சி

பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விலகும் இவர் அடுத்து இயக்குனராகவும் களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

மனைவி, மகள் ஆராதனா, மகன் குகன் தாஸுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்வதுண்டு. அந்த புகைப்படங்களை அடிக்கடி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்கவுள்ளனர் என்ற தகவல் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், வெளியான தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

தற்போது, தனது மூன்றாவது குழந்தை குறித்த மகிழ்ச்சியான செய்தியை தனது X பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த பதிவில் “எங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும், குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Exit mobile version