Tamil News

சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ என்ற சிறப்புப் விருதினை நேற்று சனிக்கிழமை (8) மன்னார் இந்து மக்கள் வழங்கி கௌரவித்தனர்.

மன்னார் எழுத்தூர் செல்வநகர் அம்மன் ஆலயத்தில் நேற்று (8) இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும் சைவத்திற்கு அவர் ஆற்றி வரும் பணியை கெளரவிக்கும் முகமாக இவ்விருது வழங்கப்பட்டது.இதன்போது செங்கோலொன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதன்போது சிவசேனை அமைப்பினர், உலக சைவ மகா சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version