Site icon Tamil News

கிழக்கு காங்கோவில் ஷெல் தாக்குதல் : 03 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

கிழக்கு காங்கோவில் உள்ள அவர்களின் முகாமுக்கு அருகே ஒரு மோட்டார் ஷெல் விழுந்ததில் மூன்று தான்சானிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பில் SADC வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

கிழக்கு காங்கோ கனிமங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் இதனை கைப்பற்ற ஆயதக்குழுக்கள் போராடுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானது M23 ஆகும், இது சமீபத்திய ஆண்டுகளில் வடக்கு கிவு மாகாணத்தில் இருந்து  நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர காரணமாக உள்ளது.

Exit mobile version