Site icon Tamil News

இலங்கை : கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் ஏற்பட்ட பதற்றம்: 7 பேர் படுகாயம்

இன்று பிற்பகல் கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக சமகி ஜன பலவேகய (SJB) நடத்திய பிரச்சார பேரணியின் போது பொறுப்பற்ற முறையில் பட்டாசுகளை கொளுத்தியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி நகரின் மையப்பகுதியில் பல இடங்களில் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே பட்டாசுகளை கொளுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version