Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்று தீயில் எரிந்து நாசமானது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.

ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இவ்வாறு தீபிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து   மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version