Site icon Tamil News

ஆஸ்திரேலியா முழுவதும் தீவிரமான நோய் பரவல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் இன்ப்ளூயன்ஸாவின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன.

இந்த ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் மட்டும் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுடன் 10,976 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

2023 ஆம் ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடுகையில், அந்த நோயாளிகளின் பெறுமதி 6000 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளால் ஆஸ்திரேலியா முழுவதும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் புய் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களை விட இந்த வருடம் இன்புளுவன்சா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியை முறையாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் நோய் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கடந்த வார நிலவரப்படி, சின்சிடியல் வைரஸின் அபாயமும் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உரிய ஆர்எஸ்வி தடுப்பூசியை உடனடியாக போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version