Site icon Tamil News

நாமலுக்கு வழங்கப்பட்ட பதவியால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் மற்றுமொரு பெரியவரின் பெயரை முன்மொழிவதற்கு கட்சி தயாராகி வரும் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளராக மூத்த உறுப்பினரின் பெயர் கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவிருந்த போதிலும், நாமல் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழிவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளமையால் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Exit mobile version