Site icon Tamil News

பாடசலை மாணவர்களால் தாக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரகசியமாக தோண்டியெடுப்பு

வெலிப்பன்ன, கல்மட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பெப்ரவரி 14, 2023 அன்று, கல்மட்ட பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை கொல்லப்பட்டார்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நினைவுச் சடங்குகள் மற்றும் பிற நாட்களில் கல்லறையை சுத்தம் செய்து விளக்குகளை ஏற்றி வருகின்றனர்.  இந்நிலையில், கல்லறைக்கு வந்த போது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version