Site icon Tamil News

சீனாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

சீனாவில் நிலவும் வறட்சியை எதிர்த்துப் போராட 7 மாநிலங்களுக்கு வேளாண் அமைச்சு அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

அண்மை வாரங்களில் சீனாவைக் கடும் வெப்பம் பாதித்திருக்கிறது. அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று முன்னுரைக்கப்பட்டது.

கடும் சூட்டினாலும் மழைப் பற்றாக்குறையினாலும் ஹபெய், ஹெனான், ஷான்டோங் போன்ற மாநிலங்களில் கோடைக்கால விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடப்படுகின்றது.

தண்ணீர், உணவு உற்பத்தியைப் பாதுகாக்கும்படி மாநில அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

வார இறுதி வரை வெப்பம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version