Site icon Tamil News

டொஃபி கொடுத்து சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை பேருந்து சாரதி

மைனர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், குருநாகலில் பாடசாலை-பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, போதைப்பொருள் கலந்த இனிப்புகளை வழங்கி 11 வயது சிறுவனை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் குருநாகல் காவற்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Exit mobile version