Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

 

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி ஊடகத்திற்கான அதிகூடிய வெட்டுப் புள்ளி 154 ஆகும்.

அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் குறைந்தபட்ச புள்ளி 150 ஆகவும், வவுனியா மாவட்டம் 145 புள்ளிகளாகவும் உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 147 ஆகும்.

 

Exit mobile version