Tamil News

மாமியார் தலையில் துண்டை போட்ட ஜெயம் ரவி… காரணம் தெரியுமா?

அறிமுக இயக்குனர்களை நம்பி படம் நடிக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சைரன்.

இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்தில் முதல் வாரம் இறுதியில் நல்ல வசூலை பெற்றிருந்த நிலையில், அதன்பின் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

அதன்படி, இப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. சைரன் திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வெளிவந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்திருந்த சைரன் படம், ஐந்து நாட்கள் முடிவில் ரூ. 8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

மருமகனை நம்பி வந்து பணத்தை போட்ட மாமியாருக்கு இப்படியொரு நிலைமையா என திரை வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பொன்னியின் செல்வன் படத்திற்குப்பிறகு ஜெயம் ரவி நடித்த அனைத்து படங்களும் இப்படித்தான் தோற்றுப்போகின்றதாகவும் கிசு கிசுக்கப்படுகின்றது.

Exit mobile version