Tamil News

திருமணத்திற்கு அடுத்த நாளே குழந்தை பெற்ற மணமகள்! அதிர்ச்சியில் மணமகன்

தெலுங்கானாவில் முதலிரவில் வயிற்று வலியால் அலறி துடித்த மணப்பெண் மறுநாள் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆணுடன் கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது

இதையடுத்து திருமணத்திற்கு முதல் நாள் இரவு மணப்பெண் வயிறு வலிப்பதாக கதறி அழுதார். இதனால் பயந்துபோன மணமகன் உடனடியாக மணமகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்துள்ளார்.

மணமகளை பரிசோதித்த டாக்டர்கள், மணமகள் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கணவரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட மணமகன் அதிர்ச்சியடைந்தார்.

மறுநாள் மணமகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் ஏமாற்றி திருமணம் செய்ததாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. மணமகன், மணமகள் மற்றும் பிறந்த குழந்தையை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, குழந்தையையும், பெண்ணையும் பெண்ணின் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். திருமணம் முடிந்த மறுநாளே பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version