Site icon Tamil News

ரஷ்ய இராணுவத்தில் இலங்கை கூலிப்படையினர் – ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் வாக்குறுதி

ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு வெளியுறவு அமைச்சர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சப்ரி அவர்கள் சார்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை தலையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஜூன் 26-27 திகதிகளில், இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த பிரச்சினையை விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version