Site icon Tamil News

உக்ரைனின் செர்னிஹிவ் நகரை குறிவைத்து தாக்கிய ரஷ்யா – ஐவர் பலி!

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 37 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 11 குழந்தைகள்  உள்ளடங்குவதாகவும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, ரஷ்யாவின் ஏவுகணை Chernihiv  வை குறிவைத்து தாக்கியதாகவும், இதில், பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், தியேட்டர் ஆகியன சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version