ரஷ்யா தனது பசிபிக் கடற்படை, கப்பற்படையை திடீர் ஆய்வு செய்து முடித்துள்ளதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயிற்சியில் 25,000 வீரர்கள், 89 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 167 கப்பல்கள் ஈடுபட்டன.
ஆய்வில் ஈடுபட்டிருந்த பசிபிக் கடற்படையின் அனைத்து துருப்புகளும் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தன என்று அமைச்சகம் மேலும் கூறியது.
இந்த ஆய்வு நடவடிக்கைகள், ம் கடலில் இருந்து எதிரியின் ஆக்கிரமிப்பைத் தடுக்க படைகளின் உயர் தயார்நிலை பற்றி அறிய உதவியாகவுள்ளது.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த தகவல் வந்துள்ளது.