Site icon Tamil News

இலங்கையில் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம்?

இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பில் எதிர்வுகூறியுள்ளனர்.

பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2022ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், ஆடைத்தொழிற்துறை அரைவாசியை கொண்டிருந்தது.

கொவிட்-19 தொற்று காலப்பகுதியில் கூட ஆடைத்தொழிற்துறை வருவாயை ஈட்டியிருந்த போதிலும், சர்வதேச சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆடைக்கான கேள்வி குறைவு காரணமாக ஆடைத்தொழிற்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

அதிலும் ஆடை ஏற்றுமதி வருவாயை பிரதானமாக நம்பியிருக்கும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

இதன்காரணமாக இலங்கையின் ஆடைத்தொழிற்சாலையில் உள்ள பலர் தொழிலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version