சதொச நிறுவனங்களை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திடம் கையகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல்களில் நிதி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.