Site icon Tamil News

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

இலங்கையில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்கு  படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட எட்டு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை தென்னிந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படையினர் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது தங்கம் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கடலோர காவல்படையினர் படகை நிறுத்த உத்தரவிட்ட போதும், அந்த உத்தரவை மீறி சந்தேகநபர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.  கைவிடப்பட்ட படகில் உரிய தங்க கையிருப்பு இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது.

கைப்பற்றப்பட்ட தங்கம் நீதிமன்ற நடவடிக்கைக்காக தென்னிந்திய சுங்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version