Site icon Tamil News

அரச தாதியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற தீர்மானம் இரத்து!

அரச தாதியர் சேவையில் நான்கு தர செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டும் என  எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ள அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

Exit mobile version