Site icon Tamil News

5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை! ரணில் வெளியிட்ட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஜம்மியதுல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதிய்யா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

Exit mobile version