Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் செவிபுலனற்ற பெண் படைத்த சாதனை!

மியா லீ ரூக்ஸ் என்ற காது கேளாத  பெண் ஒருவர் தென்னாப்பிரிக்கா அழகி பட்டம் வென்றார்.

பட்டத்தை பிடித்த முதல் காது கேளாத பெண் என்ற சாதனை புத்தகத்தில் மியா இணைந்தார்.

தற்போது 28 வயதாகும் மியா, சுமார் ஒரு வயதாக இருந்தபோது, ​​காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேசும் திறனை வளர்த்துக் கொள்ள இரண்டு வருடங்கள் போராட வேண்டியிருந்தது என்றார்.

தற்போது மாடலாகவும், வணிக மேலாளராகவும் பணிபுரியும் மியா, “எல்லைகளை உடைப்பதற்காக நான் இந்த பூமியில் வைக்கப்பட்டேன் என்று இப்போது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Exit mobile version