Site icon Tamil News

மீண்டும் விளையாட தயார் – திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தான் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவுக்குழுவின் புரிந்துணர்வு இன்மையினால் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் நீக்கப்பட்டு முறையற்ற தெரிவுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகக் கிண்ணத் தொடரில் திறமையான மற்றும் பொருத்தமான துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு தெரிவுக்குழு முன்னுரிமை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிகாரிகள் புதிய தெரிவுக்குழுவை நியமித்தால் தான் மீண்டும் வந்து ஓரிரு வருடங்கள் விளையாட தயார் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version