Site icon Tamil News

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் சாந்தன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டர்களில் ஒருவரான சாந்தனை உடனடியாக நாடு கடத்துவதற்கான அவசர பயண ஆவணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தற்போது அடைக்கப்பட்டுள்ள சாந்தனை, திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லவுள்ளனர்.

சாந்தனின் கோரிக்கையின் பேரில், இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் அவருக்கு தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியது, இப்போது நாடு கடத்த சென்னையிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம்
(FRRO) வெளியேறும் அனுமதியை வழங்கியுள்ளது.

“சாந்தன் டிக்கெட் புக் செய்தவுடன் நாடு கடத்தப்படுவார். அவரை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, ”என்று கலெக்டர் எம்.பிரதீப் குமார் கூறியுள்ளார்.

Exit mobile version