Site icon Tamil News

பாகிஸ்தானில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை : இருநூறுக்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த ஜுலை முதல் இதுவரையான காலப்பகுதியில் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி இர்பான் அலி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான மழைக்கு காலநிலை மாற்றத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரும்பாலான இறப்புகள் பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் தெற்கு சிந்து மாகாணங்களில் நிகழ்ந்துள்ளன.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது பெய்து வரும் மழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். $30 வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version