Tamil News

காட்டக்கூடாததை எல்லாம் காட்டி ஆபாசமாக நடித்திருக்கும் ரச்சிதா… பயில்வான் ஷாக்

சீரியல்கள் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். தற்போது அவர் ஜேஎஸ்கே சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஃபயர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தான் பிக்பாஸ் பாலாஜி முருதாஸ் லீட் ரோலில் நடித்து வந்த நிலையில் தனது சம்பளம் வரவில்லை என்று கூறி படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவை ரீ போஸ்ட் செய்த ரச்சிதா மகாலட்சுமி, ஏமாற்று இடத்தில் இருந்து நான் ஏற்கனவே வெளியேறிவிட்டேன்.

ஆனால் நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார். மேலும் படத்தின் இயக்குனரை டேக் செய்து, படத்தின் தயாரிப்பாளராக இருக்கலாம், இயக்குனராக இருக்கலாம். அதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரச்சிதா சம்பளம் வாங்கிவிட்டு பொய் சொல்வதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ஃபயர் படத்தில் ரச்சிதா படு ஆபாசமாக நடித்துள்ளார். இதுவரை அவர் காட்டக்கூடாத பாகங்களை எல்லாம் காட்டி படு ஆபாசமாக நடித்துள்ளார்.

அந்தளவுக்கு மோசமாக கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் அவர் அப்படி ஆபாசமாக நடித்ததில்லை. பொது நிகழ்ச்சிக்கு வரும் போது கூட அவர் புடவையில் தான் வருவார். ஆனால் இந்த படத்தில் ஆபாச படத்தில் வருவது போல் நடித்துள்ளார். படத்தின் கதை தெரிந்து தான் படத்தில் கவர்ச்சி காட்சிகள் வரும் என்று தெரிந்தே தான அவர் நடித்திருந்தார். ஆனால் தற்போது தனது படத்தையே ஷிட் என்று கமெண்ட் செய்துள்ளார்.

தனது படத்தையே ஷிட் என்று ஒரு நடிகை சொன்னால் அவங்களை பத்தி என்ன நான் சொல்வது என்று படத்தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். மேலும் ஃபயர் படத்திற்காக ரச்சிதா சம்பளம் வாங்கியதற்கான ஆதாரங்களை தயாரிப்பாளர் தன்னிடம் காட்டியதாகவும் , ஆனால் தான் சம்பளம் வாங்கவில்லை என்று ரச்சிதா பொய் சொல்வதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

Exit mobile version