Site icon Tamil News

QR முறைமை தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு!

தற்போதுள்ள தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (QR) முறை இன்று (செப். 01) முதல் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு விடையளிக்கும் வகையில் 2022 ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

Exit mobile version