Site icon Tamil News

வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு முதல் அறிக்கையை வெளியிட்டார் புட்டின்!

வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கிரெம்ளின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ள செய்தியில் தாக்குதல் பற்றி குறிப்பிடப்படவில்லை.  அதற்கு பதிலாக ஒரு தொழில்துறை மன்றத்தில் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலம் எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரியவில்லை.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி  ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி அழைப்பையும் மேற்கொண்டுள்ளார், அவர் ரஷ்ய தலைமைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக Interfax செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version