Site icon Tamil News

புடின் வலிமையான தலைவர் அல்ல – ரஷ்ய பிரஜை!

புடின் ஒரு வலிமையான தலைவர் அல்ல என்பதை ரஷ்ய மக்கள் உணர்ந்துள்ளார்கள் என அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் மனைவி மெரினா லிழட்வினென்கோ தெரிவித்துள்ளார்.

அலெக்சாண்டர் லிட்வினென் முன்னாள் FSBயின் முகவர் ஆவர். இவர் பொலோனியம் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

வாக்னர் படையினர் ரஷ்யாவை முற்றுகையிட்டுள்ள நிலையில், அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது முன்னமே கணிக்கக்கூடியது எனக்கூறிய அவர், ரஷ்யாவில் விளாடிமிர் புடினின் அதிகாரமின்மையை நிலைமை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

ரஷ்யாவிற்குள் உள்ள மக்களின் ஈடுபாட்டுடன் மேற்கு நாடுகள் ” கூடிய விரைவில் புடினை வெளியேற்ற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் செய்த செயல்களால் அவரை “ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்” என்றும்,   ஆனால் ரஷ்யாவில் யாரோ ஒருவர் புட்டினிடமிருந்து நாட்டில் மாற்றத்தைத் தூண்ட வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version