Site icon Tamil News

திருகோணமலையில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்!

திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (01.10) போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கட்டுமான கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த தடை உத்தரவை மீறி மீளவும் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், போராட்டம் ஒன்றை முன்னெடுக்க மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Exit mobile version