Site icon Tamil News

கொழும்பில் அமுலாகும் நடைமுறை – சாரதிகளுக்கு எச்சரிக்கை

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிப்பதற்காக பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய CCTV கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் 108 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

இந்த புதிய முறையின் கீழ், தொலைதூரத்தில் இருந்து கொழும்புக்கு வரும் சாரதி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்டால், அது தொடர்பான அபராத சீட்டு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸார் மூலம் வழங்கப்படும்.

இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில், கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை தினமும் போலீசார் பிடிக்க முடியும்.

Exit mobile version