Site icon Tamil News

இலங்கைக்கு வந்த 113 பெண்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள்!

இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள் வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல்,  தாக்குதல்,  பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலாவை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version