Tamil News

மீண்டும் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா… இப்படி ஒரு முடிவா?

நடிகை பிரியங்கா நல்காரி சன்டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனவர்.

அதற்கு பிறகு சீதா ராமன் தொடரில் அவர் நடிக்க தொடங்கினார். ஆனால் திருமணம் ஆகி வெளிநாட்டில் இருந்ததால் சீதா ராமன் தொடரில் இருந்து விலகினார்.

அதன் பின் நள தமயந்தி என்ற புது சீரியலில் பிரியங்கா நல்காரி நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் நள தமயந்தி கதையில் இருந்தும் தற்போது அவர் விலகிவிட்டார். சீரியலில் தமயந்தி கதாபாத்திரம் இறந்துவிடுவது போல காட்டப்படுகின்றது.

அடுத்து புது ஹீரோயின் மற்றும் கதை உடன் சீரியல் நகர இருக்கிறது. புது ஹீரோயினாக ஶ்ரீநிதி இனி நடிக்க இருக்கிறார்.

Exit mobile version